Wednesday, July 16, 2008

Part - 7

நான் அவளது பதிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். காவல்காரி என் கேள்வியைக் காதில் வாங்கியது போலவே தெரியவில்லை.தன் அவல வாழ்க்கையைப் பின்னோக்கி ஓடவிட்டு அசைபோட்டிருப்பாளோ என்னவோ..

நான் மெதுவாக," ப்ளீஸ்.. எனக்கு என்னவோ போல இருக்கு. சுடியை விட்டுடேன்." என்றேன். அப்போதுதான் அவள் என் சுடிதாரை அளவுக்கு மேல் உயர்த்தியிருப்பதையே உணர்ந்தாள். என் கால்களை ஒருமுறை பார்த்துவிட்டு, சுடியை அவள் கைகளில் இருந்து விடுவித்தாள். எனக்கு நிம்மதி ஆயிற்று. "நன்றி..!" என்றேன். அவளோ,"எதற்கு..?" என்றாள். எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது.

நான் சற்றும் எதிர்பார்க்காத விநாடியில், காவல்காரி மிக இயல்பாக, ஏதோ புத்தகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டுவதுபோல, என் கீழ் முன்னழகை மறைத்திருந்த, சுடிதார் துணியை நீக்கினாள். என் முகத்தில் யாரோ காறி உமிழ்ந்தது போல உணர்ந்தேன். சட்டென்று மூடி மறைத்துக்கொள்ளும் உந்துதலில், கையை அசைக்க முயன்று முடியாமல் துவண்டேன். உடலை அசைத்து துணியை பழையநிலைக்கு கொண்டுவர முயன்றேன். பலனில்லை. என் உடல் கூனிக் குறுகியது. நான் கண்களாலேயே அவளைக் கெஞ்சினேன்.

"உமாஜி.. அற்புதமான உடலமைப்பு உங்களுக்கு.. எவ்வளவு கச்சிதமாக,ரவிவர்மா ஓவியம் போல இருக்கிறீர்கள்..? உங்கள் நிர்வாணம் எனக்கு அறுவெறுப்பைத் தரவில்லை.. ஒரு வளர்ந்த குழந்தைபோல தோற்றமளிக்கிறீர்கள். சந்தேகமில்லை.. நீங்கள் ஒரு தேவதை..!"

"பாராட்டுக்கு நன்றி.. என்னை அவமானத்தில் துடிதுடிக்க வைக்காதே.. தயவுசெய்து என் மானத்தைக் காப்பாற்று..!"

கிட்டத்தட்ட அழுதுவிட்டேன்.

"இருங்கள் உமாஜி.. இதுபோன்ற பேரழகு எல்லோருக்கும் வாய்க்காது.. இதில் நீங்கள் அவமானப்பட ஏதுமில்லை. நான் பொறாமைப்படதான் நிறைய இருக்கிறது..!"

"அய்யோ.. என்னை என்ன சித்ரவதை வேண்டுமானாலும் செய்து கொள்..தயவு செய்து என் அங்கத்தை மூடு.. ப்ளீஸ்..!"

அவள் எழுந்து என் கால் பக்கமாக போனாள்.. நான் சிரமப்பட்டு, தலையை உயர்த்திப் பார்க்க, அவளோ என் கால் இடுக்கில் பார்வையைச் செலுத்தி ஆராய்ந்துகொண்டிருந்தாள். நான் கட்டுகளை விடுவிக்க போராடியதில், என் மேல் தோல் வழன்று போனதுதான் மிச்சம்.

இந்தக் கோணத்தில் கூட நீங்கள் மிக அழகு உமாஜி. எவ்வளவு அழகியாக இருந்தாலும், கால்களுக்கு கீழிருந்து நோக்கும்போது, அவள் கொஞ்சம் அசிங்கமாகத்தான் தெரிவாள். ஒன்று பின்புறம் தொங்கிப் போயிருக்கும், அல்லது, தொடைகள் ஒழுங்கான வடிவத்தில் இராது.. சிலருக்கு "அந்த" இடம் கருப்பாக இருக்கும். சிலருக்கு கால்கள் தொள..தொளவென்று இருக்கும், வேறு சிலருக்கு, கால்கள் கவட்டை போலவும், சிலருக்கு வெளிப்பக்கம் வளைந்து, ஆர்ச் போலவும் இருக்கும். உங்களுக்கோ, முழங்கால் வரை தொடைகள் இணையாகவும், அதற்குக் கீழே கால்கள் இலேசாக வெளிப்புறம் வளைந்தும் இருக்கிறது. தொடைகள் திரட்சியாக இருக்கின்றன. கால்களில் ரோம வளர்ச்சி மிக மிகக் குறைவாக இருக்கிறது. நீங்கள் பெண்ணினத்தின் அற்புதம். உங்கள் வம்சாவழி இந்தப் பேரழகை உங்களுக்குத் தந்திருக்க வேண்டும். தென்னிந்தியப் பெண்கள் உண்மையிலேயே அழகிகள்தான்..!

"இந்தப் பழங்குடியினப் பெண்ணுக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறதே.. யாரையும் ஆளைப் பார்த்து எடை போட முடியாது போலும்" இவ்வாறு சிந்தித்தாலும், ஒரு பெண் என் உடலமைப்பை வியந்து பாராட்டும்போது, எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. நான் ஓரளவு அழகாக இருப்பதில் என் அம்மாவின் பங்கு மகத்தானது. ஒரு கைதேர்ந்த சிற்பியைப் போல என்னை அம்மா உருவாக்கியிருந்தாள்.

அம்மா... என் தாய் மட்டுமல்ல.. என் அந்தரங்க சினேகிதி, என் ஆசான், என் பயிற்சியாளர், என் அழகுக்கலை நிபுணர். பல நேரங்களில் சவுக்கெடுத்துச் சுழற்றும் சர்வாதிகாரியும்கூட..

அம்மாவின் கதையும் பரிதாபத்துக்குரியதுதான்.. தன் 16*ம் வயதில், தூரத்து அத்தை பையனையே திருமணம் செய்துகொண்டவள் அம்மா. அத்தை ஒரு முசுடு.. அப்பாவோ தன் அம்மாவின் சொல் மீறாத பிள்ளை. தன் அம்மா சொன்னால்தான் மனைவியையே ஏறெடுத்துப் பார்ப்பாராம்.. இளம்பெண்ணாக இருந்த அம்மா, நாள் முழுதும் சமையல் உள்ளில் அவியவேண்டும், இரவு 11 மணி வரை இடுப்பொடிய, வீட்டுவேலை. மறுநாள் 4 மணிக்கு எழுந்து மாட்டுச்சாணம் அள்ளத் தொடங்கினால், பின் இரவு 11 மணி வரை நெட்டி வாங்கும். இரவு நேரத்தில்கூட அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தனிமை கிடையாது. தன் அன்னை மடியிலேயே கூடத்தில் படுத்து தூங்கிவிடுவாராம் அப்பா. கணவனுக்காக காத்திருக்கும், இளம் மருமகளின் தவிப்பை குரூரமாக இரசிப்பாளாம் அத்தை..!

அப்படி இருந்தும், ஒருநாள் அத்தைப்பாட்டி ராம கதை கேட்க கோவிலுக்கு சென்ற நேரத்தில், அம்மாவின் இளமை அப்பாவை ஈர்க்க, அந்த ஒரே உறவில் ஜனித்தவளாம் நான்..!
பின்னர், அத்தை வந்து குய்யோ முறையோ என்று கத்தி, அப்பாவும் அம்மாவும் சேரவிடாமல் பண்ணிவிட்டாள். ஒருநாள் அமாவாசை விரதம். கொல்லைக்கு வாழை இலை நறுக்கப்போன அப்பா கிணற்றடியில் வழுக்கி விழுந்து, கபால மோட்சம். இரண்டே மாத இல்லறம். ஒரே முறை சம்போகம். அம்மா விதவையானாள்.

கணவரின் உடல்மீது விழுந்து அழப்போன அம்மா முடியைப்பிடித்து, தரதரவென ஸ்டோர் ரூமுக்கு இழுத்துச் சென்றாள் அத்தைப்பாட்டி. கன்னத்தில் மாறி மாறி அறைந்து, அம்மாவின் அழகு முகத்தை, மடேர் மடேர் என்று கல் சுவற்றில் இடித்ததில் புருவம் திறந்துகொள்ள, அதீத ரத்த சேதாரத்தில் மயங்கிவிட்டாள் அம்மா. குற்றுயிராகக் கிடக்கும் மருமகளை உள்ளேயே போட்டு பூட்டிவிட்டு மகனின் இறுதிக் காரியங்களை நடத்தினாள் அந்தப் பழிகாரி. கணவனைப் பறிகொடுத்ததும் இல்லாமல், துக்கிரி என்ற பட்டப்பெயரையும் சுமந்து வெம்பிய அம்மாவின் தலையை, மொட்டை அடித்து, முரட்டு காடாத்துணியால் ஆன வெள்ளைப்புடவையை கொடுத்து சமையல் உள்ளில் சிறை வைத்தாள் அத்தைப்பாட்டி.

ரவிக்கை கிடையாது. புடவையால் தலை முதல் பாதம் வரை மூடிக்கொள்ள வேண்டும். நாள் முழுதும் அடிமை போல உழைத்துவிட்டு, ஜன்னல் இல்லாத உக்கிராண அறையில், உடலும் மனமும் புழுங்கித் துடித்த அம்மாவை தூரத்து சித்தப்பா சிறைமீட்டார். தனி வீடு எடுத்துக்கொடுத்து, பஞ்சாயத்து வைத்து அத்தைப்பாட்டியிடம் கொஞ்சம் பணம் வாங்கி அம்மாவின் ஜீவியத்துக்கு வழி செய்தவர் அம்மாவின் சித்தப்பாதான். அம்மா தையல் வேலை தெரிந்தவள்.நானும் பிறந்துவிட, என்னை ஆளாக்குவதே லட்சியமாகக்கொண்டு, அப்பழுக்கற்ற வாழ்க்கை நடத்தினாள் அம்மா.பின்னர் அத்தைப்பாட்டி சாகும்தருவாயில் மனம் திருந்தி, திரண்ட சொத்தை என்பேரில் எழுதிவைத்துவிட்டு மண்டையைப் போட்டாள்.

என்னை யாரும் குறை சொல்லாத வகையில் அம்மா வளர்த்தாள்.அதிர்ந்து சிரிக்கக்கூடாது. அனாவசிய பேச்சு கூடாது. ரேடியோ கேட்கக் கூடாது, ஆன்மீகப் பத்திரிகை தவிர வேறு எதுவும் வாசிக்கக் கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள்..!

கால்களை விரித்து சப்பணம் போட்டு அமர்ந்தால் சுள்ளென்று தொடையில் கிள்ளுவாள் அம்மா. இரண்டு கால்களையும் இணைத்து, தொடை நெருக்கி, முழங்கால்கள் மார்பை அழுத்த, கால்களை கட்டிக்கொண்டுதான் அமரவேண்டும் என்று 10 வயதில் இருந்தே பழக்கினாள். பின்னர்தான் விவரம் தெரிந்தது.

கால்களை விரித்து வைத்தால் பெண்ணுறுப்பு காற்று புகுந்து பெருத்துவிடுமாம்.. முழங்கால்களால் மார்பை அழுத்தி வைக்காமல் இருந்தால், மார்பகம் பெருத்துவிடுமாம்.. அவள் என்னைச் செய்த சித்ரவதை அவை மட்டுமா..?

10 வயதில் இருந்தே என்னைக் குளிப்பாட்டி விடும்போது, குப்பைமேனி இலை, மஞ்சள், வேம்பு, எலுமிச்சை நான்கையும் அரைத்து, என் அக்குள்களிலும், தொடை இடுக்கிலும் கரகரவென்று தேய்த்துவிடுவாள். நெருப்பை பூசிக்கொண்டதுபோல திகுதிகுவென காந்தும். மஞ்சளையும், இன்னும் சில பொருட்களையும் அரைத்து என் உடல்முழுதும் அப்பிவிடுவாள்.. என் வயதுப் பெண்கள் குளிக்கப் போனோம், சோப்புப் போட்டோம், முழுக்குப் போட்டோம்.. வந்தோம் என்று இருந்தபோது, எனக்கு மட்டும் ஏன் இந்தக் கொடூரச் சித்ரவதை என்று அப்போது விளங்கவில்லை.

பின்னர் கல்லூரி விடுதியறையில், தோழிகளுக்கிடையே ஒளிவு, மறைவு என்று எதுவுமில்லாதபோது, அவர்களின் ஆச்சரியம் கலந்த பாராட்டுகளைக் கேட்கும்போது அம்மாவின் நோக்கமும் உழைப்பும் விளங்கியது.

என் தோழிகள், அக்குள் ரோமம் நீக்க அரும்பாடு பட்டு, ஒரே மாதத்துக்குள் மீண்டும் கசகசவென மண்டும் போது, நான் மட்டும் அன்றலர்ந்த மலர்போல, பேபி சாஃப்ட் அக்குள்களுடன் கவலையற்று இருப்பேன்.

"எப்படிப்பா.. உனக்கு ப்யூபிக் ஹேர் இல்லாம இருக்கு..? எனக்கு பொறாமையா இருக்குப்பா..!" என்பாள் ரேசரும் கையுமாக ஒருத்தி.

இன்னொருத்தி, ஆன் ஃப்ரெஞ்ச் க்ரீமை தன் கால்களில் தடவிக்கொண்டே, என் நைட்டியை உயர்த்திப்பார்த்து, "நீ கொடுத்து வச்சவடி உமா..!" என்று பெருமூச்செறிவாள்.

மற்றொரு வெட்கம் கெட்டவளோ, " இவள் தோலில் மட்டும் பேபி இல்லேடி.. அதுவும் பேபி போலத்தான்.." என்று மானத்தை வாங்குவாள். "எங்கே.. காட்டுடி.. " என்று எல்லா ராட்சசிகளும் என்னை கட்டிலில் தூக்கிப்போட்டு துகில் உரிவார்கள்.. அவ்ர்களுக்கு ஈடு கொடுக்கமுடியாமல், செய்வதை செய்துகொள்ளுங்கள் என்ற ரீதியில் முகத்தை மூடிக்கொண்டு உடலை பந்தாகச் சுருட்டிக் கொள்வேன். மனதுக்குள் அம்மாவை வாழ்த்துவேன்.

அப்படிப்பட்ட அம்மா, என் கணவர் வாட்ஸ் ஊருக்குப் போய் 2 மாதம் கழித்து,கேட்டாள்..

"இந்த மாசம் குளிச்சிட்டே போலருக்கே..!"

இன்னும் 2 வருஷம் குளிச்சுட்டே இருப்பேம்மா.. எங்களுக்குள் அது இன்னும் நடக்கல..!" என்று எல்லா விபரத்தையும் சொன்னேன்.

"உன் தலையெழுத்துமா இப்படி இருக்கணும்.. எனக்குதான் கட்டில் சுகமே கிட்டாமப் போயிடுத்து.. உன் நிலையும் அதுதானா..?

என்று விசனப்பட்டவள், அடுத்தநாள் என்னை அனாதையாக்கிவிட்டு படுக்கையில் பூப்போல இறந்துகிடந்தாள்.. டாக்டர் சொன்னார்..

"சைலண்ட் அட்டாக்.. தூக்கத்திலேயே போயிடுத்து.. மகராசி..!"



No comments: